பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா
பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் தினம் விழா கொண்டாடப்பட்டது. வட்டாட்சியர் உதயகுமார் தலைமை தாங்கினார். சமூக பாதுக்காப்பு திட்ட வட்டாட்சியர் பூபாலசந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ஷானாஸ், தலைமையில் நடந்த்து துணை வட்டாட்சியர் மோகன், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் கெளரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் இவரது துணைவியாரும் கலந்து கொண்டு பெண்கள் பெருமைகளை பற்றி பேசினார். இந்நிகழ்ச்சியில் அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மண்டல துணை வட்டாட்சியர் செந்தமிழ்செல்வி நன்றி கூறினார்.