ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு கணினி ஆய்வகம் திறப்பு

ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு  கணினி  ஆய்வகம் திறப்பு : 

 

 திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் அமைந்துள்ள  ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு கணினி ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.விழாவை பள்ளி தாளாளர் விஷ்ணுசரண்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

 

பள்ளி இயக்குநர்கள் அருளரசு மற்றும் பரணிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.பள்ளியின் முதல்வர் யால்டா நாகலட்சுமி முன்னிலை வகித்தார்.

 

திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்து,கணினியும் அதன் சிறப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

 

ஆய்வகத்தில் கணினி தொடர்பான அனைத்து ஆய்வுகளும் சிறப்பான  முறையில் மேற்கொள்ளும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

இதில் பள்ளி துணை முதல்வர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />